Saturday, 6 February 2016

பிரண்டைச் சத்துமாவு

தேவையானவை:
நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, 
புளித்த மோர் – ஒரு லிட்டர், 
கோதுமை – ஒரு கிலோ, 
கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.
செய்முறை:
பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.
இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்:
உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home